என்ன ஒற்றுமைக்கான சிலையை மோடி திறந்தாரா? ஜிக்னேஷ் மேவானி எப்படி கலாய்க்கிறார் பாருங்க
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்ததை வைத்து குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அவரை கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video

காந்தி நகர்: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்ததை வைத்து குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அவரை கிண்டல் செய்துள்ளார்.
குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். வண்ணமயமான விழாக்களுடன் இந்த சிலை திறக்கப்பட்டது.

இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.
இந்நிலையில் சிலைக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது 2300 கோடி ரூபாயை இதற்கு செலவழிக்கலாமா என்று கேட்கிறார்கள். இந்த நிலையில் குஜராத்தின் வட்கம் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இதுகுறித்து டிவிட் செய்துள்ளார்.
ஜிக்னேஷ் தனது டிவிட்டில் ''ஒரு மனிதரின் மொத்த அரசியலும் பிரிவினையை மையப்படுத்தி இருக்கும் போது அப்படிப்பட்ட நபர் ஒற்றுமைக்காக நின்ற மனிதரின் சிலையை திறப்பதா, என்ன ஒரு வினோதம்'' என்று மோடியை கிண்டல் செய்துள்ளார்.
இவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications