For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மது பாட்டில்கள் பதுக்கல்.. பீகார் முன்னாள் முதல்வரின் பேரன் கைது

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறி முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் பேரன் விக்கி மாஞ்சி கைது செய்யப்பட்டார்.

பீகாரில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. அதன்படி கடும் தண்டனை சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி தடையை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது சாராயம் காய்ச்சினாலோ பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

Jitanram Manjhi Grandson Vicky Manjhi arrested with liquors in Bihar

மது குடித்து தகராறு செய்பவர்களுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் பேரன் விக்கி மாஞ்சி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
formwr bihar chief minister Jitanram Manjhi Grandson Vicky Manjhi arrested with liquors in Bihar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X