காஷ்மீரில் 24 மணிநேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 24 மணிநேரத்தில் 9 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் அதிரடியாக சுட்டுக் கொலை செய்தனர். இந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விரைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்புப்படையினரும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். நேற்று முதல் கடந்த 24 மணிநேரம் வரை இரு இடங்களில் நடைபெற்ற மோதலில் இதுவரை மொத்தம் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் தரப்பில் ராணுவ வீரர் 3 பேர் வீர மரணம் அடைந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications