தேனிலவு பேச்சு.. பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தேனிலவுக்கு செல்வது போல் தலித் வீடுகளுக்கு சென்று வருகிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் ராம்தேவ். இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தலித் மக்களை கேவலப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என சில அமைப்புகள் அறிக்கையும் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த விஜய் ராவ் என்பவர், இந்த தேன்நிலவு பேச்சு தொடர்பாக பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜோத்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவை இன்று விசாரித்த மாஜிஸ்திரேட் பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications