ஜெ உள்ளிட்ட நால்வரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார் நீதிபதி குன்ஹா!
பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு மொத்தம் 2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இருவர் பிணையமாக கொடுத்துள்ளனர். இதேபோல மற்ற மூவருக்கும் பிணையம் அளிக்கப்பட்டதால் நால்வரையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் ஜெ. உட்பட நால்வருக்கும் தலா 2 பேர் பிணையம் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. அதன்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற ஆர்டரை ஜெயலலிதா வக்கீல்கள் சமர்ப்பித்தனர். இதையடுத்து ஜாமீன் நடைமுறைகளை நீதிபதி குன்ஹா ஆரம்பித்தார்.

ஜெயலலிதாவுக்காக பரத் மற்றும் குணஜோதி ஆகிய இருவர் பிணையம் அளித்தனர். பெங்களூர் அடுத்த ஜிகனி பகுதியில் சர்வே எண் 442ல் 32 குண்டே (கர்நாடக நில மதிப்பு) நிலம் பரத்துக்கு உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.5 கோடி. ஆனால் அரசு வழிகாட்டு மதிப்பின்படி இது ரூ.1 கோடியாம். இதை நீதிபதியிடம் தெரிவித்தே அவர் பிணையம் அளித்தார்.
குணஜோதி என்பவர் தனது 1 கோடி மதிப்புள்ள நிலத்தை பிணையம் அளித்தார்.குணஜோதி, கர்நாடக அதிமுக செயலாளர் வா.புகழேந்தியின் மனைவியாகும்.
இதையடுத்து பார்மாலிட்டிக்காக சில கேள்விகளை குன்ஹா அவர்களிடம் கேட்டார். மேலும், ஜெயலலிதா தலைமறைவானார் உங்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியும்தானே என்று கேட்டார். ஆம் என்று அவர்கள் கூறியபிறகு பிணையத்தை ஏற்றுக்கொண்டார்.
இதேபோல பெங்களூர் நாராயணப்பா கார்டனை சேர்ந்த லட்சுமிபதி, ராஜு ஆகியோர் சசிகலாவுக்கு பிணையம் அளித்தனர். இளவரசிக்கு ராஜேந்திரன் மற்றும் வா.புகழேந்தி ஆகியோர் பிணையம் அளித்தனர். சுதாகரனுக்கு லோகேஷ், அன்பம்மாள் ஆகிய இருவர் பிணையம் அளித்தனர். ஆக மொத்தம் நால்வருக்குமாக 8 கோடி பிணையமானது.
இதன்பிறகு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் பிணையம் அளித்தவர்களிடமிருந்து ரூ.1 கோடி பாண்ட் எழுதி வாங்கிக்கொண்டு ஜாமீனில் விடுதலை செய்ய அனுமதிக்குமாறு கோர்ட் ரிஜிஸ்டருக்கு குன்ஹா உத்தரவிட்டார். மேலும், ஜெ. உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்பிடமிருந்தும், தலா ரூ.1 கோடி பாண்ட் எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஜெயில் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்பிறகு கோர்ட் நடைமுறைகளை முடித்துக்கொண்டு அந்த உத்தரவு மத்திய சிறைச்சாலைக்கு செல்லும். அதை சிறை நிர்வாகம் பரிசீலித்து நால்வரையும் மதியம் விடுதலை செய்ய உள்ளது. கோர்ட் மற்றும் சிறை நடுவே சுமார் 20 கிலோமீட்டர் தூரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications