Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திரா என்கவுன்ட்டரில் இருந்து நூல்இழையில் தப்பித்தேன்: 3வது சாட்சியம் பகீர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திராவில் நடந்த என்கவுன்ட்டரில் இருந்து தப்பி வந்த தமிழகத்தைச் சேர்ந்த இளங்கோ தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி அம்மாநில போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றனர். அந்த என்கவுன்ட்டரில் இருந்து தப்பித்த 2 பேர் தேசிய மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இது திட்டமிட்ட படுகொலை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் என்கவுன்ட்டரில் இருந்து தப்பித்த 3வது நபரான தமிழகத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவரும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆஜரானார். என்கவுன்ட்டர் பற்றி ஆந்திர போலீசார் கூறியது எல்லாம் பொய் என்று அவர் தெரிவித்தார்.

அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

சித்தாள் வேலை

சித்தாள் வேலை

ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள மேலக்காவனூரைச் சேர்ந்தவன் நான். என் ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஆந்திர மாநிலம் நகரியில் சித்தாள் வேலை இருப்பதாகக் கூறி என்னை அழைத்துக் கொண்டு சென்றார்.

நகரி

நகரி

ஏப்ரல் 6ம் தேதி இரவு 9 மணிக்கு நாங்கள் நகரியை அடைந்தோம். சாப்பிடுவதற்காக ஒரு கடைக்கு சென்றோம். அங்கு இரண்டு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்ததை பார்த்துவிட்டு ஆட்டோவில் ஏறினோம். ஆனால் எங்கள் ஆட்டோவை ஆயுதம் ஏந்திய போலீசார் தடுத்து நிறுத்தினர்.

வேன்

வேன்

போலீசார் என்னையும், பன்னீர்செல்வத்தையும் ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் போனில் தெலுங்கில் ஏதோ கூறினார். உடனே ஒரு வேன் வந்தது. அதில் ஏற்கனவே 20 பேர் இருந்தனர். அதில் எங்களையும் ஏற்றிக் கொண்டனர். அதனுடன் ஒரு லாரியில் ஆயுதம் ஏந்திய போலீசாரும் வந்தனர்.

ரேஞ்சர் அலுவலகம்

ரேஞ்சர் அலுவலகம்

எங்களை ஏற்றிச் சென்ற வேன் கீழ்திருப்பதியில் உள்ள ரேஞ்சர் அலுவலகம் முன்பு நின்றது. அப்போது லாரியில் இருந்து போலீசார் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். எங்களை போட்டோ எடுத்தனர். அந்த நேரத்தில் தான் தப்பித்து காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டேன்.

வேலூர்

வேலூர்

நான் மலையில் ஏறி, காட்டுப் பகுதிக்குள் 3 மணிநேரமாக மறைந்திருந்தேன். மறுநாள் காலை அந்த வழியாக பைக்கில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு கீழ் திருப்பதிக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் வேலூர் சென்றேன். அப்போது தான் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி எனக்கு தெரிய வந்தது என்றார் இளங்கோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+