சென்னை, மும்பை, பெங்களூரில் 40% இளசுகளுக்கே தேசிய கீதம் தெரிந்துள்ளது: என்ன கொடுமைடா!
மும்பை: சென்னை, மும்பை மற்றும் பெங்களூரில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இளம் தலைமுறையினரில் வெறும் 10 சதவீதம் பேருக்கு தான் நம் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்தின் சிறப்பு தெரிந்துள்ளது. மேலும் 40 சதவீதம் பேரால் மட்டுமே தேசிய கீதத்தை தவறு இல்லாமல் பாட முடிகிறது
மும்பையில் உள்ள போடர் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் சுதந்திர தினத்தையொட்டி மும்பை, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள இளைஞர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
அதன் முடிவு தான் அதிர்ச்சியை அளிக்கிறது.

கணக்கெடுப்பு
சென்னை, மும்பை, பெங்களூரில் உள்ள 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்களிடம் நம் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்தின் சிறப்பு பற்றி கேட்கப்பட்டது. அதில் வெறும் 10 சதவீதம் பேருக்கு தான் அதன் சிறப்பு தெரிந்துள்ளது.

தேசிய கீதம்
சென்னை, மும்பை மற்றும் பெங்களூரில் வசிக்கும் இளசுகளில் வெறும் 40 சதவீதம் பேரால் மட்டுமே தேசிய கீதத்தை தவறு இல்லாமல் பாட முடிகிறது என்ற அதிர்ச்சி தகவல் கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

கல்லூரி
கல்லூரிகள், மெட்ரோ நிலையங்கள், காபி கடைகளில் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்பட்டது இந்த கணக்கெடுப்பு. மும்பையில் வெறும் 34 சதவீதம் பேருக்கே பகத் சிங் யார் என்று தெரிந்துள்ளது.

இணையதளம்
இளைஞர்களிடம் எதை கேட்டாலும் பதில் தெரியவில்லை. இணையதளத்தை நம்பி தான் உள்ளனர். இது வேதனையாக உள்ளது என்று போடர் நிறுவன தலைவர் ஸ்வாதி போபட் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications