உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் இந்திரா பானர்ஜி... 8ஆவது பெண் நீதிபதியாவார்
டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்.
டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த இந்திரா பானர்ஜி அண்மையில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அப்போது, தான் டெல்லிக்கு சென்றாலும் தனது மனது சென்னையில்தான் இருக்கும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று டெல்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். நீதிபதி இந்திரா பானர்ஜியுடன், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், வினீத் சரண் ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.
நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பானுமதி, இந்து மல்ஹோத்ரா இருந்துவருகின்றனர். இதில் இந்திரா பானர்ஜி மூன்றாவது பெண் நீதிபதியாக சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.