ஜெ. வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரிய மனு: புதிய மனு தாக்கல் செய்ய அன்பழகனுக்கு கோர்ட் உத்தரவு!
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகும் பவானிசிங்கை, நீக்கம் செய்ய க.அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று மீண்டும் வழக்கை விசாரித்தது. அப்போது அன்பழகன் புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேலேமுறையீட்டு வழக்கில் இருந்து அரசு வக்கீல் பவானிசிங்கை நீக்க கோரிய மனு நேற்றுவரை கர்நாடக தலைமை நீதிபதி வகேலா அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் வகேலா இதேபோன்ற மனுவை முன்பொருமுறை விசாரித்துள்ளதால், வேறு அமர்வுக்கு மாற்ற கோரியது பவானிசிங் தரப்பு.

இதை வகேலா தலைமையிலான அமர்வு ஏற்றுக் கொண்டு, வேறு அமர்வுக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டது. வேறு அமர்வில் நீதிபதி என்.குமார் மற்றும் பி.வீரப்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்று இந்த அமர்வு முதல் வழக்காக, இதை விசாரித்தது. அப்போது, "மனுவில் பிரதிவாதிகள் யார் யார் என்பதை தெளிவாக குறிப்பிட்டு, புதிய மனுவை தாக்கல் செய்யுங்கள்" என்று அன்பழகனுக்கு நீதிபதிகள் அறிவுரை கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications