உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம். லோதா- ஏப்.27ல் பதவியேற்கிறார்!!

Subscribe to Oneindia Tamil

Justice RM Lodha to sworn in as CJI on April 27, 2014
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம். லோதா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 27-ந் தேதியன்று பதவியேற்பார் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் இம்மாதம் 26-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக ஆர்.எம். லோதாவை சட்ட அமைச்சகம் நியமித்துள்ளது.

அவர் வரும் 27-ந் தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என்று சட்ட அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் லோதா

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் 1949ஆம் ஆண்டு பிறந்தவர் லோதா. இவரது தந்தை மால் லோதா, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. 1994ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அதே ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். அங்கு 13 ஆண்டுகள் பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு லோதா மாற்றப்பட்டர். 2008ஆம் ஆண்டு மே 13-ந் தேதி பாட்னா தலைமை நீதிபதியானார்.

அதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் லோதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+