உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமனம்!
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூரை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து பரிந்துரைத்ததை தொடர்ந்து, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள, கர்நாடகாவை சேர்ந்த, ஹெச்.எல்.தத்து பதவிக்காலம் முடிவடைய உள்ளதை தொடர்ந்து வரும் டிசம்பர், 2ம் தேதி புதிய தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டியது அவசியம்.

எனவே புதிய தலைமை நீதிபதியாக, தத்துவிற்கு அடுத்த சீனியாரிட்டி கொண்ட திராத் சிங் தாக்கூரை பரிந்துரைத்தார், தத்து. இந்த பரிந்துரை, மத்திய சட்ட துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, பிறகு பிரதமர் அலுவலகம் பச்சைக்கொடி காண்பித்த பிறகு, குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதித்துறை நியமன கமிஷன் சட்டத்தை, உச்சநீதிமன்றம் சமீபத்தில், டிஸ்மிஸ் செய்த பிறகு, வழக்கமான கொலீஜியம் முறை அடிப்படையில், நடைபெற்றுள்ள மிகப்பெரிய நியமனம் இதுதான்.
இந்திய உச்சநீதிமன்றத்தின் 43வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள தாக்கூரின் பதவிக்காலம், 2017 ஜனவரி 4ம் தேதிவரையுள்ளது.
1952ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி, புகழ் பெற்ற வழக்கறிஞரான டி.டி.தாக்கூரின் மகனாக பிறந்தவர் டி.எஸ்.தாக்கூர். டி.டி.தாக்கூர் பிற்காலத்தில், காஷ்மீர் ஹைகோர்ட் நீதிபதியாகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
டி.எஸ்.தாக்கூர், ஜம்மு காஷ்மீர் ஹைகோர்ட்டில்தான் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். பிறகு நீதிபதியாக பணி உயர்வு பெற்று, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய ஹைகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றினார். 2008ம் ஆண்டில், டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதியானார்.
அதேபோல, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஹைகோர்ட்டிலும் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தாக்கூர். 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் தாக்கூர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications