ஜார்கண்ட் தேர்தல்: டோணி தொகுதியில் பாஜக, காங்கிரஸ் பின்னடைவு
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி வசிக்கும் ஹடியா தொகுதியில் பாஜகவைவிட ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சொந்த மாநிலம்தான் ஜார்கண்ட். அம்மாநில தலைநகரான ராஞ்சியில் ஹட்டியா என்ற சட்டசபை தொகுதியில்தான் டோணி வீடு அமைந்துள்ளது.
ஹட்டியா தொகுதிக்கு கடந்த 9 ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது டோணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்ததால் வாக்களிக்கவில்லை. ஆனால் டோணியின் மனைவி சாக்ஷி வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார்.

இதனிடையே, ஹட்டியா தொகுதியில், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியை சேர்ந்த நவீன் ஜெய்ஸ்வால் 59 ஆயிரம் வாக்குகள் எடுத்து முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாஜகவை சேர்ந்த சீமா ஷர்மா 35 ஆயிரம் வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். எனவே நவீன் வெற்றி பெறப்போவது உறுதியாகியுள்ளது.
ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் ஜாவீத் அகமது 10 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் போராடிக் கொண்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அலோக் குமார் தூபே 2 ஆயிரம் வாக்குகள் மட்டுமே எடுத்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுபாஷ் முன்டாவைவிட பின்தங்கியுள்ளார். முன்டா, 5500 வாக்குகளுடன் நான்காவது இடத்திலுள்ளார்.












Click it and Unblock the Notifications