தீராத மர்மம்: கலாபவன் மணி உடல் மறு பிரேதப் பரிசோதனை!
திருச்சூர்: மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சாவில் மர்மம் நீடிப்பதால் அவரது உடல் உறுப்புகளை ஹைதராபாதில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி மறுபரிசோதனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
பிரபல நடிகர் கலாபவன் மணி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் பின்னர் அவரது சாவில் பெரும் மர்மம் உள்ளதாகவும், இதனை விசாரிக்குமாறும் கலாபவன் மணியின் சகோதரர் மற்றும் மனைவி புகார் கூறினர். இதன் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், கலாபவன் மணியின் உடலில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவில் பூச்சி மருந்து எப்படி கலந்தது... அல்லது மது அருந்திக் கொண்டிருந்த கலாபவன் மணி பூச்சி மருந்தைக் குடிக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் விசாரித்த போலீஸ், மது விருந்தன்று அவருடன் இருந்த அத்தனை பேரையும் விசாரித்துவிட்டது. எல்லோரும் ஒருமித்த குரலில் எங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர்.
கலாபவன் மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை விடுவிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் கலாபவன் மணியின் மனைவி நிம்மி கேரள உள்துறை மந்திரி ரமேஷ்சென்னிதலாவுக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார் அதில் தனது கணவர் மரணத்தில் உள்ள மர்மத்தை விரிவாக விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனவே கலாபவன் மணியின் முக்கிய உடல் உறுப்புகளை மீண்டும் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் ஹைதராபாத்தில் உள்ள மத்திய பரிசோதனை கூடத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications