அகிலேஷ் யாதவைச் சந்தித்த அப்துல்கலாம்... உ.பி.யை ‘தேற்றுவது’ குறித்து ஆலோசனை!
லக்னோ : உத்திரப்பிரதேசம் சென்றுள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அம்மாநில பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
கடந்த மாதம் உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ், தங்களது மாநிலத்திற்கு வருமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிற்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில் உத்திரப்பிரதேசம் சென்றுள்ளார் அப்துல்கலாம்.

அங்கு அகிலேஷ் யாதவைச் சந்தித்த அப்துல்கலாம், அம்மாநில பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய 9 வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உத்திரப்பிரதேச முதல்வருடன் ஆலோசனை நடத்தியது மகிழ்ச்சி' என அப்துல்கலாம் தெரிவித்துள்ளார். அப்துல்கலாமின் இந்த டுவிட்டர் பதிவை அகிலேஷ் யாதவ் ரீடுவீட் செய்துள்ளார்.
அகிலேஷ் யாதவுடன், அப்துல்கலாம் நடத்திய ஆலோசனையில் விவாதிக்கப் பட்ட 9 முக்கிய அம்சங்களாவன:
சுத்தமான குடிநீர், அடுத்த தலைமுறை கிராம தலைவர்கள், உத்திரபிரதேச பயோமாஸ் மற்றும் சோலார் ஆற்றல், இளைஞர்களின் திறமை மேம்பாடு, மாவட்ட மேம்பாட்டு திட்டங்கள், கழிவுலிருந்து ஆற்றல், சமூக தொழில் முனைவோர் மேம்பாடு, மக்களின் பாதுகாப்பு மற்றும் மொபைல் இன்க்ளூசிவ் கவர்னன்ஸ் ஆகியன ஆகும்.












Click it and Unblock the Notifications