பிறந்த மண்ணான ராமேஸ்வரத்தில் 'மக்களின் ஜனாதிபதி' கலாமின் புகழுடல்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!!
ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் மண்டபத்தில் இருந்து அவரது பிறந்த மண்ணான ராமேஸ்வரத்துக்கு ராணுவ வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பேருந்து நிலையம் அருகே அப்துல் கலாம் புகழுடல் வைக்கப்பட்டு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேகலாயாவில் நேற்று முன்தினம் மறைந்த மக்களின் ஜனாதிபதி கலாம் உடல் நேற்று டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
Emotional welcome to mortal remains of #PeoplesPresident #APJAbdulKalam on arrival @ #Mandapam on way 2 #Rameswaram pic.twitter.com/Xh6vPCrbdD
— Sitanshu Kar (@SpokespersonMoD) July 29, 2015 இதனைத் தொடர்ந்து இன்று காலை டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்திலிருந்து ராணுவ வாகனம் மூலமாக டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு கலாம் உடல் கொண்டுவரப்பட்டது. அந்த விமானத்தில் கலாமின் உறவினர்கள், மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், மேகாலயா மாநில ஆளுநர் சண்முகநாதன் ஆகியோரும் வந்தனர்.
இந்த விமானம் பகல் 12.30 மணிக்கு கலாம் உடலுடன் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசையா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் கலாம் உடலைப் பெற்றுக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட 10 பேர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கலாம் உடல் மண்டபம் எடுத்துச் செல்லப்பட்டது.
6 ஹெலிகாப்டர்களும் பின் தொடர்ந்து சென்றன. இந்த ஹெலிகாப்டர்கள் பிற்பகல் 2.10 மணியளவில் மண்டபம் சென்றடைந்தன.
அங்கு கலாம் உடல் இறக்கப்பட்டு ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் ராணுவ வாகனத்தில் கலாமின் புகழுடல் ஏற்றப்பட்டு ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.
Posted by Ponraj Vellaichamy on Wednesday, July 29, 2015
இந்த வாகனம் சென்ற வழியில் பொதுமக்கள், மாணவர்கள் வரிசையாக நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாலை 3.10 மணியளவில் பிறந்த மண்ணான ராமேஸ்வரத்தை கலாமின் புகழுடல் சென்றடைந்தது.
அங்கு பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கலாம் புகழுடல் வைக்கப்பட்டது. மத்திய அமைச்சகள் பாரிக்கர், வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உறவினர்கள் இறுதி பிரார்த்தனையை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்காக நீண்ட வரிசைகளில் பல மணிநேரமாக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
இன்று இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் நாளை காலை 11 மணிக்கு கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications