தருமபுரி குழந்தைகள் மரணம்- ராஜ்யசபாவில் கனிமொழி பேச்சு- அதிமுக கடும் எதிர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தருமபுரியில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணம் அடைந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதற்கு அதிமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

ராஜ்யசபா இன்று காலை கூடியதும் தி.மு.க எம்.பி கனிமொழி, தருமபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அப்போது அதிமுக எம்.பிக்கள் கனிமொழியை பேசவிடாத வகையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது ராஜ்யசபா தலைவர் இருக்கையில் இருந்த குரியன், அதிமுக எம்.பிக்களை சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனாலும் அதிமுகவினர் அமைதி காக்கவில்லை. தொடர்ந்தும் அமளி நீடிக்க ராஜ்யசபா சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications