நாடே மம்தாவை உற்று நோக்குகிறது.. தேர்தலுக்கு முன்பே எங்கள் அணிக்கு வெற்றியை கொடுத்த மோடி- கனிமொழி
Recommended Video
கொல்கத்தா: நாடே மம்தாவை உற்று நோக்கும் அளவுக்கு தேர்தலுக்கு முன்பே எங்கள் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெற்றியை கொடுத்துவிட்டார்.
சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு குறித்து கொல்கத்தா கமிஷனரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர். மேலும் சிபிஐயை கண்டித்து மம்தா தர்னா போராட்டம் நடத்தி வருகிறார்.
ஆதரவு
இந்த நிலையில் ஜனநாயகத்தையும் மாநில உரிமையையும் காக்கும் தனக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். மம்தாவுக்கு ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, ராகுல், கனிமொழி உள்ளிட்டோர் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஆதரவு
இதையடுத்து தர்னா போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேற்றைய தினம் திமுக எம்பி கனிமொழியும் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள் இருவரையும் மம்தா வரவேற்றார்.
மன்னிப்பு
அப்போது தேஜஸ்வி யாதவ் கூறுகையில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இப்போது கூட ஒன்றிணையாவிட்டால் இந்த நாட்டு மக்கள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.
பேரணி
இதையடுத்து கனிமொழி கூறுகையில், இந்த தர்னா போராட்டம் மூலம் மம்தா பானர்ஜியை இந்த நாடே உற்று நோக்குகிறது. இதன் மூலம் எங்களுக்கு தேர்தல் முன்பே மோடிஜி வெற்றியை கொடுத்து விட்டார். தாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வரமாட்டோம் என்பதை கொல்கத்தாவில் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்ற பேரணியை தொடர்ந்து பாஜக உணர்ந்து விட்டதாகவே கருதுகிறேன் என்றார் கனிமொழி.