மாதந்தோறும் நீர் திறப்பு குறித்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் இல்லையாம்... கர்நாடகா #cauvery
டெல்லி: தமிழகத்துக்கு மாதந்தோறும் எவ்வளவு நீர் திறக்க வேண்டும் என்ற விவரம் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் இல்லை; ஆகையால் காவிரி நீரை திறக்க கோரும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு வாதிட்டது.
காவிரியில் 50 டிஎம்சி நீரை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்துக்கு 20-ந் தேதி வரை 12,000 கன அடி நீரை கர்நாட்கா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கடந்த 18-ந் தேதி வரைதான் நீரை திறந்துவிட்டது கர்நாடகா. இந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது.
அப்போது கர்நாடகாவில் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் நீர் போதுமானதாக இல்லை. தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவதற்கு அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை.
மேலும் மாதந்தோறும் எவ்வளவு நீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை. இப்படி தீர்ப்பில் தெளிவு இல்லாத நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என வாதிடப்பட்டது.
கர்நாடகாவின் இந்த வாதத்தை நிராகரித்த தமிழக அரசு தரப்பு, கர்நாடகா அணைகளில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய அளவுக்கு நீர் உள்ளது; தமிழகத்துக்கு நீரை திறக்காவிட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டியது.












Click it and Unblock the Notifications