புல்லரிக்கும் கடமை உணர்வு.. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் ஓட்டுபோட வந்த ஆர்.ஆர். நகர் மக்கள்
கர்நாடகா மாநிலம், ஆர் ஆர் நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் வாக்குச்சாவடிக்கு பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்.ஆர்.நகர் பகுதி எனப்படும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டபோதிலும் வாக்குச் சாவடிக்கு அத்தொகுதிக்குள்பட்ட வாக்காளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பெரும் பரபரப்புகளுக்கிடையே தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அதுபோல் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணமடைந்ததால் இங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதெரியாமல் ஆர் ஆர் நகர் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் குவிந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்று கூறியவுடன் ஏமாற்றமடைந்தனர்.
பெலகாவியில் புர்காவை அகற்ற பெண் வாக்காளர்கள் மறுப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். பெங்களூருவின் ஹெப்பல் தொகுதியில் தேர்தல் அதிகாரியுடன் தகராறு செய்த பாஜக தொண்டர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ராஜாஜிநகர் வாக்குச்சாவடியில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மின்னணு இயந்திரங்கள் பழுதால் பல இடங்களில் வாக்குப் பதிவு தாமதம் ஆனது.












Click it and Unblock the Notifications