கர்நாடகாவில் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க முடிவு

காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் தமிழகத்துக்கான தண்ணீரின் அளவை 177.25 டிஎம்சியாக குறைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரம் அவகாசம் அளித்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Karnataka govt organizing all party meeting on 7th of this month about Cauvery issue

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த 22 ஆம் தேதி தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. இதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வரும் 7 ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+