கர்நாடகாவில் பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை வரி இன்றி ஓராண்டு ஓட்டலாம்!
பெங்களூர்: பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கர்நாடகாவில் ஓராண்டு காலம் வரை ஆயுட்கால சேவை வரி செலுத்தாமல் ஓடலாம் என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கர்நாடக மாநிலத்தில் ஓடினால் அதற்கு ஆயுட்கால சேவை வரி விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு மாற்றம் கொண்டு வந்தது.

அதன்படி பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கர்நாடகாவில் 30 நாட்களுக்கு மேல் ஓடினால் ஆர்.டி.ஓ.க்கள் வாகனத்தை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் ஆயுட்கால சாலை வரியை செலுத்திய பிறகே வாகனத்தை திருப்பிக் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் டிரைவ் வித்அவுட் பார்டர்ஸ் என்ற சமூக வலைதள சமூகம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அது கூறியிருப்பதாவது,
இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும் சுதந்திரமாக சென்று வரும் அடிப்படை உரிமையை பறிப்பது போன்று உள்ளது கர்நாடக அரசு விதித்துள்ள சாலை வரி. அதனால் இந்த வரியை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வெளிமாநிலங்களில் பதிவு செய்த வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சாலை வரி தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பிற மாநில வாகனங்கள் கர்நாடகாவில் ஓராண்டு வரை சாலை வரி இன்றி ஓடலாம். அதன் பிறகு வாகன உரிமையாளர்கள் ஆயுட்கால சாலை வரியை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆயுட்கால சாலை வரி என்பது உங்களின் வாகனத்தின் விலையில் 10 முதல் 25 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications