கபினியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரை திடீரென திறந்துவிட்ட கர்நாடகா
கபினி அணை நிரம்பியதால் காவிரி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்.
Recommended Video
பெங்களூரு: கபினி அணைக்கு வினாடிக்கு 30,000 கனடி நீர் வந்து கொண்டிருப்பதால் 15,000 கன அடிநீரை தமிழகத்துக்கு திடீரென திறந்துவிட்டுள்ளது கர்நாடகா.
கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்து உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு பாடும் கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில்லை.
இந்நிலையில் காவிரி நீர் எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்றும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது.
செவிசாய்க்காது
கர்நாடகத்தில் காவிரி நீரை திறந்துவிடுமாறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும் எதற்கும் செவிசாய்க்காமல் இருந்தது கர்நாடகம்.
அணைகள் நிரம்பின
தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியுள்ளது. இந்த மழையால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.
நீர் திறப்பு
கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக இருக்கிறது. இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கபினி அணையிலிருந்து காவிரி நீர் தமிழகத்தை 2 நாட்களில் வந்தடையும். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.