காவிரியில் கழிவு நீர் விவகாரம்: தமிழகத்தின் வழக்கை எதிர்கொள்வோம்- கர்நாடகா
பெங்களூரூ :காவிரியில் கழிவு நீர் கலப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாவட்டங்களில் இருந்து வெளியெற்றப்படும் கழிவு நீர் காவிரியில் கலப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியதாவது:
காவிரியில் கழிவுநீர் கலப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசின் மனுவில் உள்ள சாரம்சங்களுக்கு பதில் அளிப்பது குறித்து கர்நாடக அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.
விரைவில் தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிப்போம்.
இவ்வாறு பாட்டீல் கூறினார்.












Click it and Unblock the Notifications