மதச்சார்பற்ற கட்சிகளுக்கு சரியான பாடம் கற்பித்த கர்நாடகா தேர்தல் முடிவுகள்!
கர்நாடகா தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற சக்திகளுக்கு பாடத்தை கற்பித்துள்ளது.
Recommended Video

பெங்களூரு: பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கட்சிகளுக்கு கர்நாடகா தேர்தல் முடிவுகள் மிக சரியான பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரமாண்ட கூட்டணி அவசியம் என்பது மதச்சார்பற்ற கொள்கையாளர்களின் குரல். ஆனால் காங்கிரஸ் தலைமை இதைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்வது இல்லை.

திரிபுரா தேர்தல் முடிவுகள் வெளியான போதே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். கூட்டணி குறித்த தமது முயற்சிகளை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது; அதுதான் படுதோல்விக்குக் காரணம் என சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையிலும் அதேபோல் கருத்தைத் தெரிவித்துள்ளார் மமதா. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது எனக் குறிப்பிட்டிருக்கிறார் மமதா பானர்ஜி.
உண்மைதான். மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தால் பாஜக இந்த அளவுக்கு தனிப்பெரும்பான்மை கட்சியாக வந்திருக்கவே முடியாது. ஆனால் ஜேடிஎஸ் கட்சியின் தலைவரான தேவகவுடாவை தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் தேர்தல் களத்தில் இழிவுபடுத்தி பேசினர்.
இது ஜேடிஎஸ்-ன் வாக்கு வங்கியான ஒக்கலிகா கவுடா சமூகத்தை கொந்தளிக்க வைத்தது. அவர்களது பெரும் கோபம் காங்கிரஸ் மீது பாய்ந்தது. இதனால் ஒக்கலிக சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பழைய மைசூரு பிராந்தியத்தில் காங்கிரஸ் சில இடங்களை இழக்க நேரிட்டது. இதுவும் பாஜகவுக்கு ஆதாயமாகிப் போனது.
சித்தராமையாவின் தனிப்பட்ட விரோதம் காங்கிரஸுக்கு இழப்பை ஏற்படுத்தியது. இதைத்தவிர்த்து ஜேடிஎஸ்-உடன் காங்கிரஸ் இணக்கமாக சுமூகமான தேர்தல் உடன்பாடு செய்திருந்தால் பாஜகவின் எண்ணிக்கை நிச்சயம் டபுள் டிஜிட்டில்தான் இருந்திருக்கும்.
திரிபுராவிலும் கர்நாடகாவிலும் மாநில கட்சிகளை அல்லது மதச்சார்பற்ற சக்திகளை மதிக்காமல் நடந்து கொண்டதன் விளைவை அனுபவித்திருக்கிறது காங்கிரஸ். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களிலாவது சக மதச்சார்பற்ற சக்திகளை அரவணைத்துச் செல்ல முன்வருமா காங்கிரஸ்? என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் கேள்வி.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications