கர்நாடகா: மக்களிடம் பரிசுகளை கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய காங்கிரஸ்.. வீடியோ வெளியிட்ட பாஜக
கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் காங்கிரஸ் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்டதாக பாஜக வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் காங்கிரஸ் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்டதாக பாஜக வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சிலர் மக்களிடம் பரிசு பொருட்களை கொடுத்துவிட்டு, வாக்காளர் அட்டையை வாங்கும் காட்சி அதில் பதிவாகி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 15ம் தேதி) நடைபெறும். மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பு ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கொத்தாக நிறைய வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 10,000 வாக்காளர் அடையாள அட்டை நேற்று முதல்நாள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒர வீட்டிற்குள் ஒரு மூட்டை முழுக்க இப்படி வாக்காளர் அடையாள அட்டை வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து 24 மணி நேர விசாரணைக்கு மாநில தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.அவர்கள் அந்த அறையை சோதனையிட்ட போது, அதனுள் யாருமே இல்லை என்பது குறிப்பித்தக்கது. இதில் ஒரு நாள் விசாரணையின் முடிவில் ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் எதுவுமே போலியானது கிடையாது என்று தேர்தல்ஆணையம் கூறியுள்ளது.
ஆனாலும் ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கில் உண்மையான அடையாள அட்டைகள் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. பாஜகவின் உறுப்பினர் மஞ்சுளா நஞ்சமரி என்பவர்தான் அந்த கட்டிடத்திற்கு உரிமையாளர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் இந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 222 தொகுதிகளில் மட்டும்தான் வாக்கெடுப்பு நடத்தது. இந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகி உள்ளது.
ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் புதிய திருப்பமாக, வாக்காளர்களிடம் அடையாள அட்டையை பெற்று கொண்டு காங்கிரஸ் கட்சியினர் பரிசு பொருட்களை வழங்குவது போன்ற வீடியோவை பாஜகவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் இருப்பது காங்கிரஸ் கட்சியினர்தான் என்று பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரிசு பொருட்டாக்களை கொடுத்துவிட்டு, காங்கிரஸ் கட்சி வாக்காளர் அட்டைகளை மக்களிடம் இருந்து வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications