ஜெ. வழக்கில் அப்பீல்.. இன்னும் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறாராம் சித்து!
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்வது குறித்து இன்னும் ஆலோசனை நடந்து கொண்டுதான் இருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவரது விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், கர்நாடக அரசு இந்த விஷயத்தில் பதுங்கி வருகிறது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் முன்பே, உச்சநீதிமன்றம் சென்று ஸ்டே வாங்க தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் சித்தராமையாவை வலியுறுத்திய பிறகும், மவுனம் சாதித்து வருகிறார் சித்தராமையா.

இந்நிலையில், சித்தராமையா நேற்று கூறுகையில், மேல்முறையீடு செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்கள், அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். இவர்களின் ஆலோசனையின்பேரில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா வேண்டாமா என்பது குறதி்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications