தமிழகத்திடம் இருந்து ரூ.5.12 கோடி வேண்டும்... ஜெ.வழக்கில் கணக்கு காட்டும் கர்நாடகா...

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குக்காக செலவிட்ட சுமார் 5.12 கோடி ரூபாயை தமிழக அரசிடம் இருந்து கேட்டு பெற உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இந்த தகவலை கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்தற்காக செலவிட்ட விவரங்களை உள்துறை திரட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

jayachandra

கர்நாடக சட்டத்துறை மட்டுமே ஜெயலலிதா வழக்குக்காக 5 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அந்த தொகையை தமிழக அரசிடம் இருந்து கேட்டுப் பெற உள்ளதாகவும் ஜெயசந்திரா தெரிவித்தார்.

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலைசெய்து தீர்பளித்தார்.

தீர்ப்பில் கணித பிழை இருப்பதாக புகார்கூறப்பட்டது. இதையடுத்து, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் ஆகியோரின் பரிந்துரையை ஏற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என கடந்த 1-ம் தேதி கர்நாடக அமைச்சரவை முடிவு செய்தது.

குமாரசாமியின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை கோர உள்ளதாக வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+