காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுகிறதா? ராணுவ குவிப்பின் நோக்கம் என்ன? ஆளுநர் சொன்ன அந்த தகவல் இதுதான்
Recommended Video
ஸ்ரீநகர்: சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.
காஷ்மீரில் தொடர்ச்சியாக துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அங்கு பெரும் பரபரப்பு சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் அரசியல் குழு ஒன்று இன்று ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தியது.
இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்த உமர் அப்துல்லா, ஆளுநர் தங்களிடம் தெரிவித்தது என்ன என்பது பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதை பாருங்கள்:

தீவிரவாதிகள்
உடனடி நடவடிக்கை தேவைப்படும் வகையில் பாதுகாப்பு நிலைமை மோசமாகியுள்ளதாக ஆளுநர் மாலிக் தெரிவித்தார். அமர்நாத் யாத்திரை வழியில், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன.

வெடிகுண்டுகள்
பாகிஸ்தானால் எல்லையில் அத்துமீறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நமது ராணுவத்தால் திறம்பட பதிலடி கொடுக்கப்பட்டது. இதை நேற்று மதியம் செய்தியாளர் சந்திப்பில் ராணுவ கார்ப்ஸ் கமாண்டர் மற்றும் டிஜிபி குறிப்பிட்டுள்ளனர். ராணுவத்தால் மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றிய விவரங்கள் அதில் வழங்கப்பட்டன. தீவிரவாத அச்சுறுத்தலின் தீவிரத்தன்மையால் உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.

பக்தர்கள், பயணிகள்
இந்தச் சூழலில்தான் அமர்நாத் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை விரைவில் திரும்புமாறு அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவது அரசின் பொறுப்பாகும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.

பிரிக்கப்படாது
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள 370வது சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாகவோ, அல்லது, காஷ்மீரை இரண்டு மாநிலமாக பிரிப்பது தொடர்பாகவோ மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு ஆளுநர் எங்களிடம் தெரிவித்தார் என்று உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications