For Daily Alerts
Just In
பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல்: இந்திய வீரர் பலி! 6 பேர் படுகாயம்
உள்துறை அமைச்சர் ஷிண்டே நேற்று காஷ்மீருக்கு சென்றார். இந்நிலையில், ஆர்.எஸ் புரா, ராம்கார், செனாஸ், அக்னூர் மற்றும் பர்க்வால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
செனாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்தியா ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிய ரக ராக்கெட்டுகள், கையெறி குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, அரினா பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
Comments
English summary
Indian soldier has been shot dead in Indian-administered Jammu and Kashmir, the chief minister of the disputed region says.
Story first published: Wednesday, October 23, 2013, 9:55 [IST]