பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் பிரியவே பிரியாது: பரூக் அப்துல்லா உறுதி
லண்டன்: பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் பிரிந்து செல்லாது என்று அம்மாநில முன்னாள் முதல்வர்பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் ஜம்மு காஷ்மீர் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பரூக் அப்துல்லா பங்கேற்று பேசியதாவது:

போர் மூளும் என அச்சுறுத்துவது அல்லது நாங்கள் அணு ஆயுத வல்லமை கொண்டவர்கள் என்றோ, அணு குண்டுகளை பயன்படுத்துவோம் என்று கூறுவதோ எந்த வகையிலும் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க உதவாது. பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
பாகிஸ்தானால் காஷ்மீரை கைப்பற்ற முடியாது. இது ஒரு போதும் நடக்கப்போவது இல்லை. ஒருகாலத்திலும் காஷ்மீர், பாகிஸ்தானுடன் பிரிந்து போகவே போகாது.
இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிடமே நான் ஒரு கோரிக்கை முன்வைக்க விரும்புகிறேன். சோகங்களுடன் வாழ்வதை விட இணைந்து முன்னோக்கி அடுத்த கட்டத்துக்கு இருநாடுகளும் செல்ல வேண்டும்.
இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications