ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் 2017-ல் 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் 2017-ல் மட்டும் 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2017-ம் ஆண்டு மட்டும் 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ்.சாந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2017-ம் ஆண்டு மட்டும் ஜம்மு காஷ்மீரில் 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 80 பேர் உள்ளூர் தீவிரவாதிகள். 110 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த 110 வெளிநாட்டினரில் 66 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 125 முதல் 130 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீர் நிலவரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வன்முறை, பயங்கரவாதம், துப்பாக்கிகள், போதைப் பொருட்களின் பிடியில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு விடுவிக்கப்பட வேண்டும். விரைவில் வன்முறையற்ற காஷ்மீரை நாம் காணப் போகிறோம். ஜம்மு காஷ்மீரில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஊருவல் எதுவும் இல்லை.
இவ்வாறு ராணுவ தளபதி சாந்து தெரிவித்தார்.