காஷ்மீரில் 3 பேர் என்கவுண்டர்.. விதியை மீறிய இந்திய ராணுவ வீரர்கள்..ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூடு ஒன்றில் இந்திய ராணுவ வீரர்கள் விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
காஷ்மீரில் இருக்கும் ஷோபியான் பகுதியில் அடிக்கடி இந்திய ராணுவம் என்கவுண்டர் நிகழ்த்துவது வழக்கம். உளவு தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் இங்கே துப்பாக்கி சூடு நடத்துவதும், தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்வதும் வழக்கம்.
கடந்த ஒரு வருடமாக ஷோபியான் பகுதியில் அடிக்கடி இப்படி என்கவுண்டர் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 18ம் தேதி இங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர்கள் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எங்கு நடந்தது
இந்த துப்பாக்கி சூடு அங்கு இருக்கும் அம்ஷி புரா பகுதியில் நடந்தது. இதில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூவர் இம்தியாஸ் அஹமது, அப்ரார் அஹமது, முகமது இப்ரார் ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும் ராஜோரி பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் காணாமல் போனதாக போலீசாரிடம் இவர்களின் உறவினர்கள் ஜூலை 17ம் தேதி புகார் அளித்துள்ளனர்.

எங்கே வேலை
ஆப்பிள் தோட்டம் ஒன்றில் இவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். அம்ஷிபுரா பகுதியில் இவர்கள் மூவரும் ரூம் எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் ஜூலை 18ம் தேதி இவர்கள் ராணுவம் மூலம் தீவிரவாதிகள் என்று கூறி சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவம் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட இவர்கள் மூவரும் அப்பாவிகள் என்று அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒழுங்கு நடவடிக்கை
இந்த என்கவுண்டர் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், என்கவுண்டர் தொடர்பாக இந்திய ராணுவ தரப்பு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், என்கவுண்டரின் போது இந்திய வீரர்களை விதிகளை மீறி செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ராணுவ தரப்பு கூறியுள்ளது.

ராணுவ ஆபரேஷன்
எல்லையில் ராணுவ ஆபரேஷன்கள் குறித்த விதிமுறைகளை அடங்கிய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (Armed Forces Special Powers Act AFSPA) இந்த துப்பாக்கி சூட்டில் மீறப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. இதனால் இந்த வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. 4 வார விசாரணையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

எத்தனை பேர்
ஆனால் எத்தனை ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ராணுவ தரப்பு இன்னும் தெரிவிக்கவில்லை. சாதாரண கூலி தொழிலாளிகளை ராணுவம் கொன்றுவிட்டது என்று இந்த மூவரின் குடும்பத்தினர் புகார் வைத்துள்ளனர். இந்திய ராணுவத்தினருக்கு எதிராக இப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications