தேசத்தை உலுக்கிய கதுவா சிறுமி பலாத்கார படுகொலை வழக்கு- 3 பேருக்கு ஆயுள்- மூவருக்கு 5 ஆண்டு சிறை
Recommended Video
ஸ்ரீநகர்: தேசத்தையே உலுக்கிய காஷ்மீர் சிறுமி பலாத்கார படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி காணாமல் போனார். ஒருவாரம் கழித்து சிதைந்த நிலையில் அவரது சடலம்தான் கிடைத்தது.
ஆனால் சிறுமியின் மரணம் குறித்து அம்மாநில போலீசார் தொடக்கத்தில் விசாரணை நடத்தவில்லை. இதனால் கொந்தளித்து போன பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போரடினர்.

கோவிலுக்குள் பலாத்காரம்
சிறுமிக்கு நீதி கேட்டு தேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. பின்னர்தான் இந்துத்துவா வெறியர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அம்பலமானது. சிறுமியை கதுவா காட்டுப்பகுதியில் இருந்து கடத்திச் சென்ற கொடூரர்கள், கோவில் ஒன்றில் 4 நாட்களாக மறைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். அச்சிறுமிக்கு நினைவே திரும்பாத வகையில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

கல்லை போட்டு கொலை
4 நாட்களாக உணவும் தண்ணீரும் தராமலேயே இந்த கொடூர சம்பவத்தை கோவிலுக்குள் வைத்தே நிகழ்த்தி இருக்கின்றனர். அதுவும் வெளியில் தெரியாமல் இருக்க பூஜைகளை தொடர்ந்து செய்து கொண்டே இந்த படுபாதகத்தை நடத்தியிருந்தனர். பலாத்காரம் செய்த கையோடு தலையில் கல்லை போட்டு கொலையும் செய்தனர் குற்றவாளிகள்.

பாஜக ஆதரவு
இக்கொடூர குற்றவாளிகளுக்கு பாஜக முழுமையாக ஆதரவு தெரிவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் காமுகர்களான முதன்மை குற்றவாளி சஞ்ஜித் ராம் மற்றும் 4 போலீசார் என மொத்தம் 7 பேரை கைது செய்தது போலீஸ்.

பதான்கோட் நீதிமன்றம்
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்தததே அச்சமூகத்தினரை அச்சுறுத்துவதற்கு என வாக்குமூலமும் கொடுத்தனர். உச்சநீதிமன்றத்துக்கு சென்ற இவ்வழக்கு, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
|
3 பேருக்கு ஆயுள் தண்டனை
கடந்த ஆண்டு மே மாதம் 31-ந் தேதி முதல் பதான்கோட் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி தினமும் நடைபெற்று வந்தது. நாட்டை கொந்தளிக்க வைத்த இவ்வழக்கில் இன்று பதான்கோட் நீதிபதி தேஜ்விந்தர் சிங் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் ஞ்சி ராம், ஆனந்த் தத்தா, பர்வேஷ்குமார், தீபக் கஜூரியா, சுரேந்தர் வர்மா, திலக் ராஜ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஷால் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முதன்மை குற்றவாளிகளான சஞ்சிராம், பர்வேஷ் குமார், தீபக் கஜூரியா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications