பாஜக, காங்கிரஸை பலாத்காரம் செய்துவிட்டார் கெஜ்ரிவால்: ராம் கோபால் வர்மா
ஹைதராபாத்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மற்றும் காங்கிரஸை பலாத்காரம் செய்துவிட்டதாக சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 14ம் தேதி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

முன்பை போன்று ஓடிவிடாமல் இம்முறை 5 ஆண்டுகள் பதவியில் இருக்கப் போவதாக கெஜ்ரிவால் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
The first false promise of kejriwal.. He said he will stop rape in Delhi nd now look what he has done to BJP and CONG
— Ram Gopal Varma (@RGVzoomin) February 10, 2015 இந்நிலையில் டெல்லி தேர்தல் வெற்றி பற்றி சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கெஜ்ரிவாலின் முதல் பொய்யான வாக்குறுதி... டெல்லியில் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதை தடுத்து நிறுத்துவேன் என்றார். ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அவர் செய்துள்ளதை பார்த்தீர்களா என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications