லஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவால் மகளுக்கு 5 ஆண்டு சிறை?
டெல்லி: மண்டல போக்குவரத்து அலுவலக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா ஐஐடியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அண்மையில் ஓட்டுனர் பழகுனர் உரிமம்(எல்.எல்.ஆர்.) வாங்க மண்டல போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேவையான ஆவணங்களை அளிக்காமல் அதற்கு பதில் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆவணத்திற்கு பதில் பணத்தை பெற்றுக் கொண்டு எல்.எல்.ஆர். அளிக்குமாறு அவர் அதிகாரியை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த அதிகாரி பணத்தை பெறவில்லை. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து முன்னாள் டெல்லி தலைமைச் செயலாளர் ஒமேஷ் மற்றும் பகத் சிங் புரட்சிப்படை தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா ஆகியோர் ஹர்ஷிதா மீது போலீசில் புகார் அளித்தனர். லஞ்சம் வாங்குவது மட்டும் அல்ல, லஞ்சம் கொடுப்பதும் தவறு என்பதால் ஹர்ஷிதாவுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications