நிர்பயா பாலியல் கொலை: டெய்லர் கடை வைக்க ஆசைப்படும் முக்கிய இளம் குற்றவாளி
டெல்லி: நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படவுள்ள இளம் குற்றவாளிக்கு டெய்லர் கடை வைக்கவும் அதற்கு தேவையான தையல் இயந்திரம், கத்தரி, டேப் போன்றவை வாங்க ரூ. 10 ஆயிரம் டெல்லி அரசு வழங்க வேண்டுமென டெல்லி சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம் குற்றவாளி விடுவிக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை அணுகுவது என டெல்லி பெண்கள் ஆணையம் தீர்மானித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் நிர்பயா என்னும் இளம்பெண் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த நிர்பயா சிங்கப்பூர் மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சைக்கு பின் 2012ம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இதில், ஒருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் மட்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாண்டு தண்டனை முடிந்து வரும் 20ம் தேதி அவர் விடுவிக்கப்பட இருந்தார். இது தொடர்பாக மருத்துவ மாணவியின் பெற்றோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இளம் குற்றவாளியை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இளம் குற்றவாளியால் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதை உறுதிபடுத்தப்பட வேண்டும் என்றும், அவரை கண்காணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விதிமுறைகள் வகுக்கும் வரை, அவரை விடுவிக்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதில், இளம் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில், அவரை விடுவிக்கப்படுவதில் எந்த தடையும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளம் குற்றவாளி விடுதலை
சிறுவர் கூர் நோக்கு மையத்தில் கடந்த 3 ஆண்டுகளை கழித்த அவருக்கு தற்போது 21 வயதாகிறது. இவரது விடுதலைக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், சட்டத்தின்படியே அனைத்தும் நடந்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்து விட்டது. தற்போது 21 வயதாகியுள்ள அவருக்கு தொடர்ந்து மனநல ஆலோசனைகள் மருத்துவ நிபுணர்கள் அளித்து வருகின்றனர். அத்துடன் விடுதலைக்கு பின், அவரது பெற்றோரிடம் ரகசியமாகவும் ஒப்படைக்கப்படவுள்ளார்.

டெய்லராக ஆசை
சிறுவர் கூர்நோக்கு மையத்தில் அந்த இளம் குற்றாவாளி டெய்லரிங் மற்றும் கேட்டரிங் பணிகளை ஆர்வமாக கற்றுள்ளார். அவருக்கு டெய்லராகவும் ஆசையுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து டெல்லி சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு, விடுவிக்கப்படவுள்ள இளம் குற்றவாளிக்கு டெய்லர் கடை வைக்கவும் அதற்கு தேவையான தையல் இயந்திரம், கத்தரி, டேப் போன்றவை வாங்க ரூ. 10 ஆயிரம் டெல்லி அரசு வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.

புது வாழ்க்கைக்கு உதவி
இளம் குற்றவாளிக்கு மேற்கொண்டு சில உதவிகளை அளிப்பதற்காக தனியார் தொண்டு நிறுவனங்களை அணுகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இளம் குற்றாவாளி இந்த சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் அவர் புது வாழ்க்கையை தொடங்க உதவி புரிய வேண்டுமென்பதற்காகவும் இத்தகைய உதவிகள் அவசியமாகிறது என்று சிறுவர்கள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

குடியரசுத்தலைவரிடம் முறையிட முடிவு
இதனிடையே நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம் குற்றவாளி விடுவிக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை அணுகுவது என டெல்லி பெண்கள் ஆணையம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள கருத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளி விடுவிக்கப்படுவது மிகவும் கவலைக்குரியது. அவர் விடுவிக்கப்படும் நாள் இந்திய வரலாற்றின் கருப்புநாளாகும் என்று கூறியுள்ளார்.

விடுதலை செய்ய எதிர்ப்பு
இதில் தலையீடுமாறு குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை ஆணையம் அணுகும் என்றார்.
நிர்பயா வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட இந்த இளம் குற்றவாளி விடுதலை செய்யப்படகூடாது என்றும் ஸ்வாதி கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications