ஊழல் புகாரில் சிக்கிய டெல்லி அமைச்சர் டிஸ்மிஸ்; வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பு- கேஜ்ரிவால் அதிரடி!
டெல்லி: ஊழல் புகாரில் சிக்கிய டெல்லி மாநில உணவுத்துறை அமைச்சர் ஆசிம் அகமதுகான் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்துள்ளார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் கேஜ்ரிவால் கூறியதாவது:
உணவுத்துறை அமைச்சர் ஆசிம் அகமதுகான் மீது ஊழல் புகார் எங்களுக்கு வந்தது. இது தொடர்பான 1 மணிநேர வீடியோ காட்சிகளை நானும் மணீஷ் சிசோடியாவும் பார்த்தோம்.

ஊழல் புகாருக்கு உள்ளானது என் மகனாக இருந்தாலும் கடும் நடவடிக்கைதான் எடுக்கப்படும். உணவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆசிம் அகமதுகான் நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக இம்ரான் உசைன் நியமிக்கப்படுகிறார்.
மேலும் ஆசிம்கான் மீதான புகார் விசாரணைக்காக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும். நாங்கள் ஊழல் புகாருக்குள்ளான அமைச்சரை நீக்கியுள்ளோம்.
இதேபோல் ஊழல் புகாருக்குள்ளான ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
ஊழல் புகாருக்குள்ளான ஆம் ஆத்மி அமைச்சரை நீக்கிவிட்டதாக தெரிவித்த கெஜ்ரிவால், இதே போல என வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications