டெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்
டெல்லியில் கென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 10 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

டெல்லி: கென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கென்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 10 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், டெல்லியில் வேலைபார்த்து வருகிறார். தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சத்தர்புரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்.

காருக்காக காத்திருந்தார்
புதன்கிழமை இரவு குருகிராமில் நண்பர்கள் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டார். பின்னர் சதுர்பூர் வீட்டுக்குச் செல்வதற்காக, எம்.ஜி.சாலையில் உள்ள பிரிஸ்டல் அருகே வாடகை காருக்காகக் காத்திருந்தார்.

நாங்கள் இறக்கி விடுகிறோம்
அப்போது அவர் அருகே, ஒரு சொகுசு கார் வந்து நின்றது. அதில் இருந்த மூன்று பேர் எங்கே போகணும் என கேட்டு தாங்கள் இறக்கிவிடுவதாக கூறியுள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல்
நேரம் கடந்துகொண்டே சென்றதால் வாடகைக் காரும் வராததால் , அவர்களை நம்பி அந்த கென்ய பெண் அவர்களின் காரில் ஏறினார். காருக்குள் ஏறியதும் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர்.

மதுபோதையில்
பின்னர் சிறிது தூரம் சென்றதும் அவர்களின் இரண்டு நண்பர்கள் காரில் ஏறிக்கொண்டனர். அனைவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

10 பேர் பலாத்காரம்
இதைத்தொடர்ந்து ஒரு வீட்டிற்கு முன் காரை நிறுத்திய அவர்கள் அந்தப் பெண்ணை உள்ளே இழுத்து சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், மேலும் 5 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணை அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

3 பேர் கைது
இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண் ரோந்து சென்ற போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர்.

கதா கிராமம்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே கட்டுமான பொருட்களை சப்ளை செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கதா கிராமத்தில் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

2 பேர் தலைமறைவு
3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான 2 பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விரைவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications