For Daily Alerts
Just In
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: 9-ந் தேதி கூடுகிறது கேரள சட்டசபை!!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வரும் 9- ந்தேதி கேரள சட்டசபை கூடுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கேரளா மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது.
அத்துடன் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு போன தமிழக அதிகாரிகளை கேரளா தடுத்தும் நிறுத்தியது. இந்த நிலையில் வரும் 9-ந் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க கேரள சட்டசபை கூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
English summary
Kerala assembly will discuss on 9 June, the Mullaperiyar dam issue in the wake of the Supreme Court rejecting the state's contention that the 119-year-old dam was unsafe.
Story first published: Friday, June 6, 2014, 16:04 [IST]