அப்துல் கலாமை கேரளா ஒரு போதும் மறக்காது... உம்மன் சாண்டி: கேரளா சட்டசபையில் இரங்கல்
திருவனந்தபுரம்: மக்களின் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மறைவிற்கு கேரளா சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை ராமேஸ்வரம் கொண்டு செல்வதற்கு முன்பு கேரளா கொண்டு வந்து, கேரள மக்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள சட்டசபை இன்று காலை கூடியது. இதில் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். முதல்வர் உம்மன் சாண்டி அப்துல் கலாம் பற்றி குறிப்பிடுகையில் ‘‘அவரை கேளரா ஒரு போதும் மறக்காது'' என்றார்.

மார்க்சிஸ் கம்யூனிஸ்டு தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் கூறுகையில், ‘அப்துல்கலாம் மக்களின் ஜனாதிபதியாக இருந்தார். ஜனாதிபதிக்கான நடை முறைகளை மீறி பொது மக்களுடன் கலந்து விட்டவர்‘ என்றார்.
மன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் அஞ்சலி தெரிவித்து பேசினார்கள். பின்னர் சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்த அனுமதி
இதனிடையே கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அப்துல் கலாமின் உடலை ராமேஸ்வரம் கொண்டு செல்வதற்கு முன்பு கேரளா கொண்டு வந்து, கேரள மக்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications