For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக இளைஞர் முருகன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி… கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

சிகிச்சை அளிக்க மறுத்து உயிரிழந்த தமிழக இளைஞர் முருகனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மருத்துவமனையில் உரியச் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், கொல்லத்தில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு முருகனும், முத்துவும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு முருகனைத் தவிர மற்ற 3 பேரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

முருகனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கொல்லத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர்.

 அலைக்கழிப்பு

அலைக்கழிப்பு

இதனைத் தொடர்ந்து மெடிசிட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எஸ்.யு.டி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு முருகனை அழைத்துச் சென்றும் எங்கும் அவருக்குச் சிகிச்சை அளிக்கவில்லை. தொடர்ந்து 7 மணி நேர அலைச்சலுக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரள அரசின் மீது கண்டனங்கள் பாய்ந்தது.

முதல்வர் மன்னிப்பு

முதல்வர் மன்னிப்பு

இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், நடந்த தவறுக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கொந்தளிப்பு சற்று ஓய்ந்தது.

ரூ.10 லட்சம் நிதியுதவி

ரூ.10 லட்சம் நிதியுதவி

இதனைத் தொடர்ந்து, இன்று முருகனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். முருகனின் குழந்தைகளின் கல்வியை சிபிஎம் கட்சியின் கொல்லம் மாவட்டம் குழு நேற்று ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala CM Pinarayi Vijayan has announced Rs 10 lakh to Murugan family
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X