முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக அனுமதிக்க முடியாது முடியாது: பினராயி விஜயன்
டெல்லி: முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க முடியாது என டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியார் அணை விவகாரம் மீண்டும் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக கேரளா முதல்வர் உம்மன் சாண்டி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இதனையடுத்து பற்றிக்கொண்டது பரபரப்பு.

இதனிடையே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இந்த நிலையில் கேரள முதல்வரை கண்டித்து இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறில், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவது, புதிய ஒப்பந்தம், கேரளத்துக்கு பாதுகாப்பு மற்றும் அணை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதை கேரள நீர்பாசனத் துறை முன்னாள் அமைச்சர் பி.ஜே.ஜோசப் தொடங்கி வைத்தார். மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பேசினார்.
அப்போது அவர், கேரளத்தின் புதிய முதல்வர் பினராயி விஜயன், பெரியாறு அணை பலமாக உள்ளதாகவும், புதிய அணை தேவை இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரோ, பிரதமரைச் சந்தித்து அணையின் நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த கோரிக்கை வைக்கிறார். அவருக்கு உதவும் வகையில்தான் பினராயி விஜயனின் கருத்தும் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க முடியாது என டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு தமிழக அரசு கோருவதை ஏற்க இயலாது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தேவைபட்டால் மீண்டும் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தாக்கல் செய்யும் என அவர் பேட்டியளித்தார்.
மேலும் புதிய அணை அமைப்பது தொடர்பாக சர்வதேச குழு ஒன்று அமைக்க கேரள அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகமும், மத்திய அரசும் அனுமதிக்கும் வகையில் குழுவை அமைக்க கேரள அரசு முயற்சி எடுத்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications