சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு!
Subscribe to Oneindia Tamil
பம்பா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் இன்று முதல் 21ஆம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரநாமம், களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகின்றன. மேலும் இந்த 5 நாட்களில் ஐயப்பனுக்கு தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். மேலும் வரும் 21ம் தேதி சபரிமலையில் நடை சாத்தப்படும் என திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சபரி மலை கோயிலுக்கு சென்றிருந்தார். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications