‘எண்டே பிரியமான மக்களே’.. பேஸ்புக் மூலம் வாக்காளர்களுடன் நேரடியாகப் பேசிய கேரள முதல்வர்
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெருமைக்குரிய கேரளாவில், பேஸ்புக் வாயிலாக மக்களுடன் நேரடியாக உரையாடியுள்ளார் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி.
சமூகவலைதளங்கள் மூலமாக சமீபகாலமாக திரையுலகப் பிரபலங்கள் நேரடியாக ரசிகர்களுடன் பேசுவது அதிகரித்துள்ளது. இதன்மூலம், கால் கடுக்க பிரபலங்கள் வாசலில் நின்று, நாம் ஹாய் என கையசைப்பதைக்கூட அவர்கள் கவனித்தார்களா என்ற கவலை ரசிகர்களுக்கு காணாமல் போய்விட்டது. அதேபோல், ரசிகர்களும் தாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை இது போன்ற சமூகவலைதளங்கள் மூலம் கேட்கிறார்கள்.
இந்நிலையில், பொதுமக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஒருவர் பேஸ்புக்கில் பதிலளித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அதிலும், இது நடந்தது வேறு எங்கோ இல்லை, நமது அண்டை மாநிலமான கேரளாவில் தான்.

செல்போன் இணைப்பு...
கல்வியறிவில் சிறந்து விளங்கும் கேரளாவில் அனைத்து பகுதிகளிலும் செல்போன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெரும்பாலான அரசு சேவைகளை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பெற முடியும்.

முதல் டிஜிட்டல் மாநிலம்...
இதேபோல், அனைத்து பஞ்சாயத்துக்களிலும் பிராட்பேன்ட் இன்டர்நெட் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றுள்ளது.

உம்மன்சாண்டி...
டிஜிட்டல் மாநிலம் என பேர் பெற்றபோதும், சமீபத்தில் தான் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி சொந்தமாக செல்போன் பயன்படுத்தத் தொடங்கியுள்ளாராம். தேபோல் பேஸ்புக்கிலும் சமீபத்தில்தான் இணைந்தார்.

லைவ் சாட்டிங்...
பேஸ்புக்கில் பிரவேசித்ததும் வாக்காளர்களுடன் நேற்று நேரடியாக உரையாடினார் உம்மன்சாண்டி. நேற்றிரவு 9 மணியளவில் சுமார் 30 நிமிடங்கள் பேஸ்புக் மூலம் வாக்காளர்களாகிய பொதுமக்களுடன் அவர் நேரடியாக உரையாற்றியுள்ளார்

முதல் முதல்வர்...
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் பேஸ்புக் மூலம் வாக்காளர்களுடன் பேசும் வாய்ப்பினை பயன்படுத்திய முதல் முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கேள்விக்கணைகள்...
உம்மன்சாண்டியுடனான இந்த உரையாடலில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு கேள்விகளைத் தொடுத்தனர். அவற்றிற்கு உம்மன்சாண்டி பதில் அளித்தார்.

பேஸ்புக்கின் பயன்...
தனது இந்த உரையாடல் குறித்து உம்மன்சாண்டி கூறுகையில், ‘வாக்காளர்களுடன் உரையாடவும், அவர்களுடன் விவாதிக்கவும், விவாதங்களை நடத்தவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த பேஸ்புக் தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications