உதவி கேட்கிறோம்.. யாரும் வரவில்லை.. பதற வைக்கும் வீடியோ.. கேரளா முழுக்க ரெட் அலெர்ட்
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்கள் வெள்ளத்தில் சிக்கியபடியே வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
Recommended Video
திருவானந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்கள் வெள்ளத்தில் சிக்கியபடியே வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
கேரளாவில் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்னும் அங்கு மழை பெய்யும் வேறு என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் தற்போது மாநிலம் முழுக்க ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 70 பேர் பலியாகி உள்ளனர்.
|
கேரள பேருந்து நிலையம்
இதை பேருந்து நிலையம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இப்படித்தான் இப்போது கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்கள் இருக்கிறது.
|
மீட்பு கூடம்
இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் என்று கலவையாக வாழும் கேரளாவில் தற்போது பள்ளி வாசல்கள், கோவில்கள், மசூதிகள்தான் மீட்பு பகுதிகளாக மாறியுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள மதராஸா ஒன்றுதான் அங்கு பெரிய மீட்பு கூட ஆகும்.
|
கொச்சி ஏர்போர்ட்
கொச்சி ஏர்போர்ட் இதனால் மொத்தமாக மூழ்கி உள்ளது. அங்கு 18ம் தேதி வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
|
ஆத்திரப்பள்ளி அருவி
கேரளாவின் அழகான ஆத்திரப்பள்ளி அருவியில் வெள்ளம் இப்படித்தான் ஓடுகிறது.
|
வீடுகளுக்குள் வெள்ளம்
சென்னையில் இருந்தது போலவே இங்கும் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. 11 மாவட்டங்களில் வீடுகள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளது.
|
எவ்வளவு வெள்ளம்
இவரின் வீட்டிற்குள் கழுத்து வரைக்கும் வெள்ளம் வந்துள்ளது. அரசுக்கு தகவல் கொடுத்தும் இப்போது வரை மீட்பு பணி செய்ய யாரும் வரவில்லை, உதவி கேட்டு இருக்கிறோம் யாரும் வரவில்லை, என்று இவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.