For Daily Alerts
Just In
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி.. தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை.. கேரள அரசு அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற தீர்ப்புக்கு கேரள மாநில அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று இந்த தீர்ப்பை வழங்கியது. அதில் இந்து மல்கோத்ரா தவிர மற்ற நான்கு நீதிபதிகளும் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் சென்று வழிபடலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இந்த தீர்ப்புக்கு கேரள மாநில அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம், இது ஒரு ஆக்கபூர்வமான தீர்ப்பு என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
[ சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை சாதாரணம் இல்லை.. விரத முறைகள் என்ன தெரியுமா? ]
Comments
English summary
Kerala government welcomes landmark supreme court judgement on Sabarimalai Temple entry for woman.