ஆளுநர் உரையின்போது மத்திய அரசு, மதவாதத்திற்கு எதிரான வரிகளை படிக்காமல் தவிர்த்த கேரள ஆளுநர் சதாசிவம்
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் ஆளுநர் உரையின்போது, அரசு தயாரித்து கொடுத்த உரையில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை வாசிக்காமலேயே ஆளுநர் சதாசிவம் தவிர்த்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இவ்வாண்டுக்கான, கேரள மாநில சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று துவங்கியது. மரபுப்படி ஆளுநர் உரை நிகழ்த்தினார்.
ஆளுநர் உரையை அரசு தயாரித்து கொடுப்பது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள வழக்கம். இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிவிட்டு பிறகு சட்டசபையில் அதை வாசிப்பார்.

ஆளுநர் உரை
கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மதிக்காமல், மாநில அரசை மீறி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது என்று பொருள்படும் வரிகளை ஆளுநர் சதாசிவம் படிக்காமல் விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, கேரளாவில் சில மதவாத அமைப்புகள், கலவரங்களை தூண்ட திட்டமிட்டுள்ளது என்ற வரிகளையும் ஆளுநர் படிக்காமல் தவிர்த்துவிட்டார்.

மத்திய அரசுக்கு எதிரான வாசகம்
கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மதிக்காமல், மாநில அரசை மீறி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது என்று பொருள்படும் வரிகளை ஆளுநர் சதாசிவம் படிக்காமல் விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, கேரளாவில் சில மதவாத அமைப்புகள், கலவரங்களை தூண்ட திட்டமிட்டுள்ளது என்ற வரிகளையும் ஆளுநர் படிக்காமல் தவிர்த்துவிட்டார்.

மதவாத அமைப்புகள்
"சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில், கேரளா, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. வாழ்க்கை தரத்தில் டாப் ரேங்கில் உள்ளது. சில மதவாத அமைப்புகள் கேரளாவில் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டுள்ளபோதிலும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது" என்பதே, ஆளுநர் படிக்காமல் விட்ட அந்த வரிகளாகும்.

கருத்து கூறுவதில்லை
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம், கேரள முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கருத்து கேட்க முயன்றது. ஆனால், இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆளுநர் உரை பற்றி அரசு சார்பில் கருத்து கூறுவது கிடையாது என்று முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications