ஆளுநர் உரையின்போது மத்திய அரசு, மதவாதத்திற்கு எதிரான வரிகளை படிக்காமல் தவிர்த்த கேரள ஆளுநர் சதாசிவம்
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் ஆளுநர் உரையின்போது, அரசு தயாரித்து கொடுத்த உரையில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை வாசிக்காமலேயே ஆளுநர் சதாசிவம் தவிர்த்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இவ்வாண்டுக்கான, கேரள மாநில சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று துவங்கியது. மரபுப்படி ஆளுநர் உரை நிகழ்த்தினார்.
ஆளுநர் உரையை அரசு தயாரித்து கொடுப்பது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள வழக்கம். இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிவிட்டு பிறகு சட்டசபையில் அதை வாசிப்பார்.

ஆளுநர் உரை
கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மதிக்காமல், மாநில அரசை மீறி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது என்று பொருள்படும் வரிகளை ஆளுநர் சதாசிவம் படிக்காமல் விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, கேரளாவில் சில மதவாத அமைப்புகள், கலவரங்களை தூண்ட திட்டமிட்டுள்ளது என்ற வரிகளையும் ஆளுநர் படிக்காமல் தவிர்த்துவிட்டார்.

மத்திய அரசுக்கு எதிரான வாசகம்
கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மதிக்காமல், மாநில அரசை மீறி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது என்று பொருள்படும் வரிகளை ஆளுநர் சதாசிவம் படிக்காமல் விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, கேரளாவில் சில மதவாத அமைப்புகள், கலவரங்களை தூண்ட திட்டமிட்டுள்ளது என்ற வரிகளையும் ஆளுநர் படிக்காமல் தவிர்த்துவிட்டார்.

மதவாத அமைப்புகள்
"சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில், கேரளா, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. வாழ்க்கை தரத்தில் டாப் ரேங்கில் உள்ளது. சில மதவாத அமைப்புகள் கேரளாவில் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டுள்ளபோதிலும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது" என்பதே, ஆளுநர் படிக்காமல் விட்ட அந்த வரிகளாகும்.

கருத்து கூறுவதில்லை
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம், கேரள முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கருத்து கேட்க முயன்றது. ஆனால், இதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆளுநர் உரை பற்றி அரசு சார்பில் கருத்து கூறுவது கிடையாது என்று முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications