நாட்டிலேயே முதல் முறையாக முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா.. கேரள அரசு அசத்தல்
கேரளாவில் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கு வரும் 26-ம் தேதி கேரள அரசு நன்றி தெரிவிக்கும் விழா நடத்துகிறது.
திருவனந்தபுரம்: கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கு வரும் 26-ம் தேதி கேரள அரசு நாட்டிலேயே முதல்முறையாக நன்றி தெரிவிக்கும் விழா நடத்துகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை சந்தித்தது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 400 பேர் வரை மரணமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

உயிரை பணயம் வைத்து
பெரும் வெள்ளப்பெருக்கால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாயினர். உணவு உடைமைகளை இழந்து தவித்த அவர்களை முப்படையினரும் தங்களின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர்.

இரவு பகல் பாராமல்
சாலைகள் சேதமடைந்த நிலையில் பல இடங்களில் நடந்தே சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினர். இரவு பகல் பாராமல் ஹெலிகாப்டர்களிலும் படகுகளிலும் சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

மொட்டை மாடியில் Thanks
கனமழை, மோசமான வானிலை, பெரும் வெள்ளப்பெருக்கு என எதையும் சிந்திக்காமல் மக்கள் பணியில் ஈடுபட்ட வீரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கேரளாவில் வீட்டின் மாடியில் Thanks என்று எழுதி நன்றியை வெளிப்படுத்தினர் மக்கள்.

முதல் முறையாக விழா
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மீட்பு பணிகளை மேற்கொண்ட முப்படையினருக்கு வரும் 26ஆம் தேதி கேரள அரசு நன்றி தெரிவிக்கும் விழா நடத்துகிறது. இதுபோல் எந்த மாநிலத்திலும் நன்றி தெரிவித்து விழா நடத்தப்பட்டதில்லை.

மீண்டும் ஒரு புதுமை
முதல் முறையாக பினராயி விஜயனின் அரசு இதனை செய்கிறது. அந்த வகையில் கேரளா மீண்டும் ஒரு புதுமையை படைக்கிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications