For Quick Alerts
For Daily Alerts
Just In
பெண்களை அசிங்கமாக பேசிய கேரள அமைச்சர்.. இடுக்கி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்- வீடியோ
கேரள அமைச்சர் எம்.எம் மணி,மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அவதூறாகப் பேசியதால் பாஜகவினர் இடுக்கி மாவட்டத்தில்கடையடைப்புப்போராட்டத்தை நடத்தினர்.
இடுக்கி: கேரளா இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பெண் தேயிலை தொழிலாளர்களைக் குறித்து அவதூறாகப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம் மணியைக் கண்டித்து பாஜகவினர் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
கேரளாவில் பினராய் தலைமையில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கம்யூனிஸ்டுகளுக்கும் பாஜகவினருக்கும் கடும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம் மணி ,மூணாற்றில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது பெண்களைக் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசினார் என பாஜகவினர் அவர் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அமைச்சர் எம்.எம் மணியைக் கண்டித்து, பாஜகவினர் இன்று இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடைகள் மூடப்பட்டு இருந்தன.
Comments
English summary
In Kerala idukki district bandh followed. Kerala electricity minister M.Mani abused tea estate workers told kerala Bjp persons.
Story first published: Tuesday, April 25, 2017, 18:33 [IST]