Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீரமரணமடைந்த கேரள வீரர் நிரஞ்சன் மீது அவதூறு- தேசத்துரோக வழக்கில் இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பஞ்சாப் தாக்குதலில் வீரமரணமடைந்த கேரள வீரரை இழிவுபடுத்திய இளைஞர் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவனின் உடலில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் போது குண்டு வெடித்ததில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன்குமார் வீரமரணம் அடைந்தார்.

Kerala man, who insulted NSG commando Niranjan killed in Pathankot blast, arrested

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ராதிகா பெங்களூரில் டாக்டராக பணிபுருகிறார். இந்த தம்பதிக்கு 2 வயதில் விஸ்மயா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீரமரணம் அடைந்த நிரஞ்சன்குமாரின் உடல் பெங்களூரில் நேற்று இறுதி அஞ்சலி முடிந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் பாலக்காட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் இன்று காலை உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த அன்வர் என்ற இளைஞர் ஒருவர் அவரை இழிவுபடுத்தும் விதமாக ஒரு தொல்லை ஒழிந்தது என்றும், அவரது மனைவிக்கு உதவியும் வேலையும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இவரது கருத்தால் கேரள போலீசார் அன்வரை தேசத்துரோக வழக்கில் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+